அண்மையச்செய்திகள்

Thursday 29 November 2018

மரியாதைக்குரிய விபிதுரைசாமி இல்ல திருமண நிகழ்வில் அய்யா அதியமான் திமுக தலைவர் ஸ்டாலி அவர்கள் கலந்து கொண்டு இணையர்களை வாழ்த்தினர்


இன்று சென்னையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய விபி துரைசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் உடன் நிறுவனர் தலைவர் அய்யா அதியமான் அவர்கள் பங்கேற்று இணையர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த மத்திய பா.ச.க அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம் நிறுவனர் அதியமான் அறிக்கை


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மத்திய நீர்வளத்துறை மூலம், பாசிச பா.ச.க அரசு அனுமதி அளித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் வரத்தை கர்நாடக அரசு திடீர் என குறைத்ததற்காக தமிழக விவசாயிகள் கொந்தளிப்பின் பாதிப்பை கடப்பதற்குள¸; அடுத்த கணமே மத்திய அரசு இவ்வாறு மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தந்திருப்பது¸ ஏற்கனவே கஜா புயலால் வாடும் தமிழக மக்களை மேலும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகம்¸ கர்நாடகா¸ கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பங்கீடு வழக்கில் உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின்படி¸ மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்துள்ளது. மேற்கண்ட நான்கு மாநிலத்தில் புதிய அணை கட்டுவதாக இருந்தால்¸ அதை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உள்ளது என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி கர்நாடக அரசு நம் தமிழக எல்லை மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை அசுர வேத்தில் செய்வதற்கான உள்நோக்கமாக¸ 400 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைத்து கார்ப்பரேட்டுகளுக்கு மின்சாரம் தாரை வார்க்கவே என கருதப்படுகிறது.
வெறுமனே கரப்சன் கலெக்சன் என செயல்படும் தமிழக அரசு மத்திய அரசுக்கு புறா விடு தூது போல கண்துடைப்புக்காக கடிதம் எழுதி காலம் கடத்துகிறது. ஆனால் கர்நாடக அரசோ தனது மாநில எம்.பிக்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து அனுமதி பெற்றுள்ளது. நமது மாநில எம்.பிக்களை அழைத்து தமிழகம் மத்திய அரசுக்கு அழுத்தம் தராதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் இந்தாண்டும் உடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தது சாதனைதான். அதேசமயம் மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைப்பதிலும் முதலிடமாக இருப்பது வேதனையே.
இறுதியாக¸ தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்வது போல தமிழக அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தை நாடவேண்டிய தருணம் இது. மேலும் இது போன்ற இரு மாநில பிரச்சனைகளில் மத்திய அரசு மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். இப்படிப்பட்ட செயல்கள் இரு மாநில மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கிவிடும். இத்திட்டத்தை அனுமதித்த மத்திய பா.ச.க அரசை ஆதித்தமிழர் பேரவை மிக வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இத்திட்டத்தின் அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை .
கோவை, 28.11.2018

Tuesday 27 November 2018

தனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூகநீதி - ஆதித்தமிழர் பேரவை சார்பில் சேலம் மாவட்ட எழுச்சி மாநாடு சங்ககிரியில் மிக சிறப்பாக நடைபெற்றது


நவம்பர் 26'' 2018ல் சேலம் மாவட்டம் சங்ககிரியில் மாலை 4 மணியளவில் வீரமங்கை ராணி நினைவு நாளில் தனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூகநீதி சேலம் மாவட்ட எழுச்சி மாநாடு ஆதித்தமிழர் பேரவை நிருவனர் அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில்
1-ஒ.என். முருகன்,சேலம் மேற்கு மாவட்ட தலைவர் காங்கிரசு கட்சி
2-ந.மகேந்திரவர்மன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மதிமுக
3-பி.பி.ராமமூர்த்தி, சேலம் மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
4-ஏ.மோகன், சேலம் மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
5-எஸ்.முகம்மது ரயீஸ், சேலம் மேற்கு மாவட்ட தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
6-கோவை ரவிக்குமார், பொது செயலாளர், ஆதித்தமிழர் பேரவை,
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1 - தமிழகத்திலுள்ள தனித் தொகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின் போதும் இரண்டு அல்லது மூன்று அருந்ததியர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் ஆனால் ஒவ்வொரு முறையும் மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 20-க்கும் குறையாமல் தேர்வு செய்யப்படுகின்றனர் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் சமூகத்திற்கு அரசியலில் சமூக நீதி இல்லை எனவே அருந்ததியர்கள் பெரும்பான்மையாக உள்ள 15 தொகுதிகளில் அனைத்து கட்சிகளும் அருந்ததியர் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தனித் தொகுதிகளில் அருந்ததியருக்கு சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது
2 - தமிழகத்தில் தொடர்ந்து சாதியின் பெயரால் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கிறோம் இளவரசன் கோகுல்ராஜ் சங்கர் ஆகியோரைத் தொடர்ந்து ஓசூர் நந்தி சுவாதி ஆணவ படுகொலை மிகுந்த கண்டனத்துக்குரியது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்வதுடன் சாதியின் பெயரால் நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்றும் இதுபோன்ற கொலைகளை விசாரிக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஓசூர் நந்தி சுவாதி கொலை வழக்கை தாமதமின்றி விசாரித்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது
3 - தாழ்த்தப்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் பாலியல் கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது தேனி ராகவி ஆத்தூர் ராஜலட்சுமி தர்மபுரி சௌமியா ஆகியோரின் படுகொலைக்கு இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது மேற்கண்ட கொலை வழக்குகளில் நேர்மையாக விசாரணை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்வதுடன் உடனடியாக விசாரணை செய்து கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
4 - தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பிரித்து அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது இந்த உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
5- தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறாத காரணத்தினால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவது தாழ்த்தப்பட்ட மக்கள் தான் எனவே தமிழக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முறையாக முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று இந்த மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
6 - கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரணங்கள் சென்றடையவில்லை குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் சென்றடையவில்லை எனவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்
7 - சேலம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகம் வாழ்கின்ற பகுதிகளில் முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் அருந்ததியர் சமூகத்திற்கு பட்டாக்கள் வழங்கப்படவில்லை எனவே சேலம் மாவட்டத்தில் வாழ்கின்ற அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் முறையாக வழங்கி அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று இந்த மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்
8 - தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை இல்லை எனவே தமிழக அரசு மேற்கு மாவட்டங்களான கோவை திருப்பூர் ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி ஆகிய இடங்களில் புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச் சிலையை தமிழக அரசு நிறுவ வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது
1 - அக்டோபர் 28 இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பூமிநாதன் தாயார் நாகம்மாள் (75)
2 - நவம்பர் 1 திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்யா நகர், செல்வி, கோமதி (21)
3 - நவம்பர் 2 மதுரை அலங்காநல்லூர் முருகன் (51)
4 - நவம்பர் 6 தருமபுரி மாவட்டம், அரூர் சவுமியா (14)
5 - நவம்பர் 19 மதுரை தனக்கன் குளம் (40) தூய்மைப் பணியாளர்
6 - நவம்பர் 20 கோவை மாவட்டம் ஆட்டோ வெள்ளியங்கிரி யின் தந்தை ஆறுமுகம்.
7 - நவம்பர் 21 விருதுநகர் மாவட்டம். திரு வில்லிபுத்தூர் கடற்கரை (50)
8 - நவம்பர் 21 நாமக்கல் மல்லசமுத்திரம் முருகேசன் (TNEB)
9 - நவம்பர் 22 திண்டுக்கல் மாட்டம். பேரவையின் வேடசந்தூர் ஒன்றியத் தலைவர் பழனிச்சாமி (52)
10 - நவம்பர் 23 விருதுநகர் மாவட்டத் தலைவர் மாயக்கண்ணன் அவர்களின் தாயார் லெட்சுமியம்மாள் (65)
11 - நவம்பர் 24 தேனி மாவட்ட முன்னாள் கொ.ப.செ ரமேஷ் பெருமாள்
12 - தூத்துக்குடி மாவட்ட நிதிச் செயலாளர் உதயசூரியன்
ஆகியோர்க்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது.
என்றும் சாதி ஒழிப்புப் பணியில்
வே.மு.சந்திரன்
மாவட்டசெயலாளர்
வலைத்தளம்: www.aathithamizharperavai.com
வலைப்பூ: www.atptamilnadu.blogspot.com
முகநூல் பக்கம்: https://www.facebook.com/adhiyamaanperavai
🔵🔴🔵







Tuesday 30 October 2018

கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலரிடம் மனு



கோவை மாநகராட்சிமாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்களுக்கு 2.மாத சம்பளத்தை தீபாவளி போனஸ்சகவும். அரசனை 62 ன் படியும் உயர்த்திய சம்பளத்தையும் உடனே வழங்குமாறும். கோவை மாநகராட்சி. நகர் நல அதிகாரி .Ch0 .சந்தித்து மணு கொடுக்கப்பட்டது. களத்தில்.

ஆதித்தமிழர் பேரவை பொது செயலாளர் கோவை ரவிக்குமார்.

பேரவை சார்பில். vh road மகேஷ்வரி மனிபராதி .சுப்பரமனி. ஆட்டோ வெள்ளிங்கிரி. தர்மராஜ்.பேரூர் ராஜேந்திரன்.

பேரவை தெழிற்சங்கம் சர்பாக. மாசானம். சரவணன். சொசைட்டி டிரைக்கடர் ரவி. சரத்குமார். சுரேஷ். வெள்ளிங்கிரி .மகளிர் தலைவி
சாந்தமணி. மஞ்சு. vh road ராமகிருஷ்ணன். மற்றும் பலர் கலந்து கொண்டா னர். .👍 ஜெய் பீம்


மதுரை தாதம்பட்டி ஊர் காலணி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


மதுரை வடக்கு புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் ஆதவன் அவர்களின் தலைமையில் மதுரை தாதம்பட்டி ஊர் காலணி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் இன்று முற்றுகையிட்டனர்.



Monday 29 October 2018

தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை செயற்குழு நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் சார்பில் தர்மபுரி நகரத்தில் மாவட்ட செயற்குழு ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் மாநில இளைஞரணி துணை செயலாளர் சிவா மாநில மாணவரணி செயலாளர் மாதேஷ் பங்கேற்று கருத்துரை வழங்கினர் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது முருகன் உள்ளிட்ட சுமார் 30 தோழர்கள் பங்கேற்றனர்




தேனியில் அருந்ததியர் பெண் மர்மச்சாவு - களத்தில் ஆதித்தமிழர் பேரவை

தேனி மாவட்டம் ஆன்டிபட்டி வட்டம் லட்சுமிபுரம் மேற்கு தெரு அருந்ததியர் காலனி முருகன் மற்றும் குமுதா மகள் நாகலட்சுமி என்பவர் 26/10/2018 அன்று தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதனால் பாதிப்பு உள்ளான பெற்றோர் தனது மகள் தற்க்கொலை செய்ய வில்லை கொலை செய்யபட்டார் என்று மறுபடியும் பாதிக்கப்பட்ட பெறறோருடன்அருந்ததியர் அமைப்புகள்
ஆதித்தமிழர் பேரவை
துனை பொதுச்செயலாளர்
தோழர்... வீரபாண்டியன்,
அருந்ததியர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் M. விஜயன் மற்றும் பொதுச் செயலாளர் ச. வல்லரசு
வே. ராமர் மாநில செய்தி தொடர்பாளர்
மற்றும் தேன் சுடர் பெண்கள் அமைப்பு ஒருங்கினைந்து தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்கானிப்பார் அலுவலகம் முற்றுகை செய்து நாகலட்சுமி சாவு தற்கொலை அல்ல கொலை என்றும் அந்த கொலைக்கு கரணமான கணவன், மாமியார் மற்றும் மாமனார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டது
தகவல் தொழில்நுட்ப பிரிவு
#ஆதித்தமிழர்_பேரவை தமிழ்நாடு




சேலம் மாநகர செயற்குழு நடைபெற்றது

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுப் போராளி வீரமங்கை ராணி வீரவணக்க நாளில் சேலம் சங்ககிரியில் நடக்கவிருக்கும் தனித்தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூக நீதி மாவட்ட மாநாட்டை எழுச்சியாக நடத்துவது தொடர்பாக இன்று நடைபெற்ற சேலம் மாநகர செயற்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டது..
சேலம் மாநகர செயலாளர் தோழர் உதயபிரகாஷ் அவர்களின் தலைமையில்
மாநகர தலைவர் தோழர் பிரபு அவர்களின் முன்னிலையில் செயற்குழு நடத்தப்பட்டது
மாநகர செயற்குழுவை மாணவரணி செயலாளர் தோழர் துரை.மாதேஸ் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தார்
முன்னாள் இராணுவ வீரரும் மாநில இளைஞரணி துணை செயலாளர் தோழர் வீரசிவா அவர்களும் மாநில மாணவரணி இணைச் செயலாளர் தோழர் டாக்டர்.மு.சிலம்பரசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..



திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றது
வணக்கம், இன்று (28.10.2018) தாராபுரம் பயணியர் விடுதியில் ஆதித்தமிழர் பேரவையின் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்க்குட்பட்ட தாராபுரம் ஒன்றியம், நகரம் ,ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. கலந்து கொண்டவர்கள்: பொன், செல்வம் (மாவட்ட செயலாளர்) பெ, முத்துசாமி(மாவட்ட தலைவர்) மு, சரவணன் (மாவட்ட து தலைவர்) தி. முருகேசன். (மாவட்ட நிதி செயலாளர்) ப, ராசேந்திரன் (மாவட்ட இளைஞர் அணி செயலாளர்) சா. வசந்தா (மாவட்ட து தலைவர்) கு. வடிவேல் (மாவட்ட அமைப்பு செயலாளர்) ஆ. ஒண்டி வீரன் (மாவட்ட து தலைவர்) பழ ,செயராசு (தாராபுரம் நகர செயலாளர்) ஆ, சிவக்குமார் (மூலனூர் ஒன்றிய செயலாளர்) மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள்: (1) எதிர் வரும் நவம்பர் 17 அன்று செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் வீரவணக்கம் செலுத்த திருப்பூர் தெற்கு மாவட்ட சார்பாக பத்து வாகனத்தில் கலந்து கொள்வது. (2) அணைத்து ஒன்றிய, நகரங்களில் பெயர்பலகை, கொடி கம்பம் அமைப்பது (3) மூன்று லட்சம் மக்கள் தொகை கொண்ட தாராபுரம் தனி தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும், போன்ற தீர்மானங்கள் இயற்றபட்டன. தோழமையுடன், பொன். செல்வம் மாவட்ட செயலாளர். (திருப்பூர் (தெ) மாவட்டம்



நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது

சிறுமி ராகவி கொலையை கண்டித்து தேனியில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தேனியில் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட சகோதரி ராகவியின் மரணத்திற்கு நீதி கோரி தலைவர் அய்யா அதியமான்அவர்கள் தலைமையில் தேனியில் மாபெரும் மக்கள் திரள் #ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .


அய்யாவின் உரையை காண இங்கு சொடுக்கவும்















Thursday 25 October 2018

அய்யா அதியமான் அவர்களின் வருகையை ஒட்டி தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டும் பணி தீவிரம்




தமிழினத் தலைவன்
#அய்யா #அதியமான் அவர்களின் வருகையை ஒட்டி தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டும் பணியில்

தகவல் தொழில்நுட்ப பிரிவு
#ஆதித்தமிழர்_பேரவை தமிழ்நாடு



சேலம் ஆத்தூரில் பதிமூன்று வயது நிரம்பிய சிறுமி ராஜலட்சுமி - அய்யா அதியமான் கண்டனம்


சேலம் ஆத்தூரில் பதிமூன்று வயது நிரம்பிய சிறுமி ராஜலட்சுமியை கொடூரமாக கொன்றுள்ளான் ஒரு ஆதிக்க சாதியவாதி. கடந்த காலத்தில்
கயர்லாஞ்சி என்கிற கிராமத்தில் நடந்த படுகொலையை போல பட்டியலின மக்கள் மீது மீண்டும் ஒரு பயங்கரமான தாக்குதல், ஊடகங்களின் மௌனம் கண்டனத்துக்குரியது.. பேரவை இதை வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த மாதம் தேனியில் ராகவி என்கிற பதிமூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து ஆதிக்க சாதி மாணவனால் கொல்லப்பட்டாள்.

தேனி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் இதுபோன்ற 31 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து ஆதிக்கசாதி குற்றவாளிகள் தொடர்ந்து தப்பித்து வருகின்றனர் பினாமி. அரசின் காவல்துறை உறுதியான எந்த கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து
வருகிறது. இதை ஆதித்தமிழர் பேரவை கண்டிக்கிறது



தோழர் பூமிநாதன் அவர்களுடைய தாயார் நாகம்மாள் அவர்கள் மறைவு - அய்யா அதியமான் இரங்கல்


*ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தோழர் பூமிநாதன் அவர்களுடைய தாயார் நாகம்மாள் அவர்கள் மறைவு அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

பூமிநாதன் அவர்களுடைய தந்தை திரு உடையான் அவர்கள் கோயில் நுழைவு போராட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்றது குறித்து அறிந்து, ஒரு வரலாற்று சிறப்புமிக்க குடும்பத்தில் நாகம்மாள் அவர்கள் இருந்துள்ளார்கள் என்பது அருந்ததியர்களுக்கு பெருமை வாய்ந்த ஒன்று.

திரு உடையான் அவர்கள் , ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றி உயிர் தியாகம் செய்த திரு இம்மானுவேல் சேகரன் அவர்களுடன் இராணுவத்தில் ஒன்றாக பணியாற்றியதுடன், அவர் செய்த போராட்டங்களில் பங்குபெற்ற வரலாறு மிகவும் போற்றுதலுக்கு உரியது.

இத்தகு சிறப்பு வாய்ந்த குடும்பத்தில் பிறந்த பூமிநாதன் அவர்கள் நமக்கு பேரவையில் செயலாளராக கிடைத்தது அரிதான ஒன்று.

தோழர் பூமிநாதன் அவர்களுக்கு பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.*

-அதியமான்


ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் பூமிநாதனின் தாயார் மரணம்

இரங்கல் செய்தி*
*ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தோழர் பூமிநாதன் தாயார் மரணம்*
நாகம்மாள் வயது 94 இன்று அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்
*மதிப்பிற்குரிய வீரத்தாய் நாகம்மாள் 70 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் நுழைவு போராட்டத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அவரது கணவரும் பூமிநாதனின் தந்தை திரு உடையான் அவர்களுடன் 5 தலித் குடும்பங்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர் ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பம் வீரத்தாய் நாகம்மாள் திரு உடையான் குடும்பத்தினர்*
மேலும் *திரு உடையான் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மதிப்பிற்குரிய தியாகி இமானுவேல் சேகரனாரின் உற்ற நண்பராக இருவரும் ராணுவத்தில் ஒன்றாக பணியாற்றியவர்கள் அதனடிப்படையில் தியாகி இமானுவேல் சேகரனார் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் திரு உடையான் அவர்கள் பங்கேற்று உள்ளார்*
வரலாற்றுச் சிறப்புமிக்க *வீரத்தாய் நாகம்மாளின் மறைவிற்கு அய்யா அதியமான் சார்பிலும் தலைமைக்குழு சார்பிலும் செம்மார்ந்த வீரவணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்*
பொதுச்செயலாளர் ஆதித்தமிழர் பேரவை

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க ஆட்சியரிடம் மனு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்களுக்கு .... 2.மாதம் சம்பளமாக தீபாவளி போனஸ் தரகோரியும் அரசாணை 62 ன் படி உயர்த்திய சம்பளத்தை உடணே வழங்க வலியுறுத்தி ..உதவி ஆணையளர் யிடம். மணு கொடுக்கப்பட்டது. ....உடன் ஆதித்தமிழர் பேரவை பொது செயலாளர் கோவை ரவிக்குமார் மற்றும் மாநகர தலைவர் vh ரோடு மகேஷ்வரி. மாநகர செயலாளர் ஜோதி முத்துக்குமார். புறநகர் மாவட்ட செயலாளர் முனுசாமி பேருர் ராஜேந்திரன் .உக்கடம் ஆட்டோ வெள்ளிங்கிரி. பேரவை தெழிற்சங்கம் சர்பாக. vh road ராமகிருஷ்ணன் .சுப்பரமனி. மாசானம். சரவணன். சொசைட்டி டிரைக்கடர் ரவி. மருதசாலம்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு
#ஆதித்தமிழர்_பேரவை தமிழ்நாடு



திண்டுக்கல் மாவட்டம் முழுதும் வீரத்தாய் இராணி நினைவுநாள் சுவர் விளம்பரங்கள்

உள் இடஒதுக்கீடு போராளி
நெருப்புத்தமிழச்சி
#வீரதாய்_இராணி அவர்களின் நினைவு நாள் சுவர் விளம்பரம்.
ஆதித்தமிழர் பேரவை
திண்டுக்கல் மாவட்டம்.