கடந்த 2012 ம் வருடம் அன்று
தூத்துக்குடி தெற்கு மாவட்ட சார்பில்
ஆதித்தமிழர் பேரவை நிறுவன
தலைவர் சமூகநீதி பாதுகாவலர் அய்யா அதியமான் அவர்களால் கொடியேற்று விழா மிக எழுச்சியோடு நடைபெற்றது.
அன்று , அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காவல்துறையினரால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கு திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முழமாக கடந்த 5 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது.
அந்த வழக்கில் ஆஜரான ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்பு செயலாளர்
தோழர் சோ. அருந்ததி அரசு உள்ளிட்ட தோழர்கள் இன்று 24-11-2017 விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின்விடுதலைக்கு உறுதுணையாக இருந்த மரியாதைக்குரிய வழக்கறிஞர் தோழர் சதீஸ்பாலன் அவர்களுக்கும் , வழக்கறிஞர் உதயா அவர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை யின் நெஞ்சம் நிறைந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
No comments:
Post a Comment