அண்மையச்செய்திகள்

Sunday 26 November 2017

தோழர் சோ. அருந்ததி அரசு உள்ளிட்ட தோழர்கள் வழக்கிலிருந்து விடுதலை


கடந்த 2012 ம் வருடம் அன்று
தூத்துக்குடி தெற்கு மாவட்ட சார்பில்
ஆதித்தமிழர் பேரவை நிறுவன
தலைவர் சமூகநீதி பாதுகாவலர் அய்யா அதியமான் அவர்களால் கொடியேற்று விழா மிக எழுச்சியோடு நடைபெற்றது.
அன்று , அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காவல்துறையினரால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கு திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முழமாக கடந்த 5 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது.
அந்த வழக்கில் ஆஜரான ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்பு செயலாளர்
தோழர் சோ. அருந்ததி அரசு உள்ளிட்ட தோழர்கள் இன்று 24-11-2017 விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின்விடுதலைக்கு உறுதுணையாக இருந்த மரியாதைக்குரிய வழக்கறிஞர் தோழர் சதீஸ்பாலன் அவர்களுக்கும் , வழக்கறிஞர் உதயா அவர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை யின் நெஞ்சம் நிறைந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்


No comments:

Post a Comment