அண்மையச்செய்திகள்

Thursday 9 November 2017

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நவம்பர் 8 கருப்புநாள் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நவம்பர் 8 கருப்புநாள் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்
***********
பணமதிப்பிழப்பு என்ற பெயரில் இந்திய பொருளாதரத்தை வீழ்ச்சியடைச் செய்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை அய்யா அதியமான் அவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தார்.தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவை தோழர்களும் பெரும்திரளாக கலந்துக்கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார்.
அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் தருமபுரியில் நடைபெற்ற கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி மாவட்டச்செயலாளர் சித்தார்த் கோ.சிவன் கண்டனத்தை பதிவு செய்தார்.உடன் மா.இ.அணி செயலாளர் சக்திவேல்,மா.கொ.ப.செயலாளர் ராஜ்குமார் ,மாவட்ட அமைப்பாளர் கார்த்திக், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் பெரும் திரளான பேரவை தோழர்கள் கலந்துக்கொண்டனர்.



No comments:

Post a Comment