அண்மையச்செய்திகள்

Friday 10 November 2017

திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற நவம்பர் 8 கருப்புநாள் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்

திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற நவம்பர் 8 கருப்புநாள் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்
***********
பணமதிப்பிழப்பு என்ற பெயரில் இந்திய பொருளாதரத்தை வீழ்ச்சியடைச் செய்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை அய்யா அதியமான் அவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தார்.தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவை தோழர்களும் பெரும்திரளாக கலந்துக்கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார்.
அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் வடக்கு மாவட்டத்தில்நடைபெற்ற கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டத்தில் சோழன்  கண்டனத்தை பதிவு செய்தார்.உடன் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சோழன், சின்னச்சாமி,துரைஅரசன்,குணசேகரன் உள்ளிட்ட  திரளான பேரவை தோழர்கள் கலந்துக்கொண்டனர்.





No comments:

Post a Comment