அண்மையச்செய்திகள்

Sunday 12 November 2017

7 தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் உட்பட்ட சாயர்புரம் கக்கன்ஜி நகர் பகுதியில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

12.11.2017 தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் உட்பட்ட சாயர்புரம் கக்கன்ஜி நகர் பகுதியில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தலைமை:
முனியாண்டி ஒன்றிய தலைவர் ,
முன்னிலை:
கதிர்வேல் ஒன்றிய செயலாளர்,
கொம்பன் ஒன்றிய துணை தலைவர் ,
வைகை செல்வன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ,
அருந்ததி முத்து ஒன்றிய மாணவரணி செயலாளர்,
சிறப்பு அழைப்பாளர்கள்:
சோ.அருந்ததி அரசு மாநில அமைப்பு செயலாளர்,
காயல் முருகேசன் தொழிலாளர் பேரவை மாநில அமைப்பு செயலாளர்,
சபா தொல்காப்பியன் மாவட்ட துணை செயலாளர்,
செ.சந்தனம் மாவட்ட மாணவரணி செயலாளர்,
மற்றும் பொருப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1, நவம்பர் 26 வீரமங்கை ராணி தோழர் நினைவு நாள் பொதுக்கூட்டத்திற்கு திருச்சிக்கு பெரும் திரளாக கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

2, திசம்பர் 17 நிறுவனர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வருகையொட்டி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொடி மற்றும் பெயர் பலகை திறப்பதென தீர்மானிக்கப்பட்டது.

3, திசம்பர் 18 சாதி ஒழிப்பு போராளி வள்ளியூர் மகாராசன் நினைவேந்தல் கூட்டத்திற்கு பெரும் திரளாக கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

4, ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாயர்புரத்திற்கு புதிய நகர பொறுப்பாளர்களை தேர்வு செய்து மாவட்ட ,மாநில தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

5, ஏப்ரல் 6 திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற இருக்கிற "உழைக்கும் மக்கள் உரிமை மாநாட்டிற்கு" ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய சார்பாக 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்





No comments:

Post a Comment