மத்திய மாநில அரசுகள் சுகாதாரம் , நோய் தடுப்பு நடவடிக்கைகளில்
ஈடுபட்டும் வரும் இந்த கால கட்டத்தில் அனைத்து நோய்களாலும் பாதிக்கப்பட்ட
ஏழை எளியோர்க்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கம்பம் அரசு மருத்துவமனையே
அணைத்து நோய்களையும் உண்டாக்கும் டெங்கு கொசுக்களையும் ,வைரஸ்களையும்
,பாக்ட்டீரியாக்களையும் உற்பத்தி செய்யும் வகையில் கழிவுநீர்களை குட்டையில்
தேக்கியும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமலும் நோய்களை
பரப்பி வருகின்றனர், இதனால் மருத்துவமனையில் வேலை செய்பவர்கள், சிகிச்சை
பெரும் உள் , வெளி நோயாளிகள், மருத்துவமனை வளாகத்தை சுற்றி உள்ள பொது
மக்கள், குறிப்பாக கழிவு நீர் குட்டைகள் அருகாமையில் வசிக்கும் ஒண்டிவீரன்
நகர் வாழ் பகுதி மக்கள் பெரிதும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் , எனவே
இனியும் நோய் பரவாமல் இருக்க கழிவுநீர் குட்டைகளையும்
மருத்துவக்கழிவுகளையும் அகற்றி சுகாதாரத்தை காக்கும் வகையில் உரிய
நடவடிக்கை எடுக்குமாறு ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கேட்டுக்
கொள்ளப்பட்டது
மோ .இரணியன்
நகர மாணவரணிச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
கம்பம்
5-10-2017
மோ .இரணியன்
நகர மாணவரணிச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
கம்பம்
5-10-2017
No comments:
Post a Comment