அண்மையச்செய்திகள்

Monday 8 May 2017

அருந்ததியர் பழனிச்சாமி மர்ம மரணம் போராட்ட களத்தில் கோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை


""""""""""""""""""""""""""""”""""
கோவை சூலூர் அருகே மந்திரிபாளையத்தை சேர்ந்த அருந்தததியர் கூலித் தொழிலாளி பழனிச்சாமி கடந்த மே 1 அன்று வழக்கமாக வேலைக்கு சென்றவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார், செய்தி அறிந்த குடும்பத்தாரும் உறவினர்களும் இந்த மரணத்தில் சந்தேகம் இருக்கிறது, இது கொலைதான் என்றும் இந்த கொலையை முன் விரோதம் கொண்ட ஆதிக்க வகுப்பை சேர்ந்த சிலர்தான் செய்திருக்க வேண்டும் உடலில் பல இடங்களில் காயாங்கள் இருக்கிறது என்று உறுதியாக சொன்னதன் அடிப்படையில் பேரவை மாவட்ட செயலாளர் உக்கடம்.முருகன் அவர்கள் களதிற்கு சென்று போராட்டத்தில் இறங்கினார், சம்பவத்திற்கு உரிய நீதி கிடக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோழர் வெண்மணி, தோழர் பன்னீர் ஆகியோருக்கு தகவல் கொடுத்து போராட்டத்தை வலுப்படுத்தினார். போராட்டத்தின் இறுதியில் பழனிச்சாமி மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் என்று காவல் மற்றும் வருவாய் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அடுத்தகட்ட போராட்டம் என்பது காவல் அதிகார்களின் நடவடிக்கையை பொறுத்தே மாறுபடும்.
4.5.2017



No comments:

Post a Comment