அண்மையச்செய்திகள்

Wednesday 11 January 2017

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்.ஆர் பட்டாசு ஆலை விபத்தில் பலியான அருந்ததியர் சமூகத்தைச் எலுமிச்சங்காய்ப் பட்டியை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்.ஆர் பட்டாசு ஆலை விபத்தில் பலியான அருந்ததியர் சமூகத்தைச் எலுமிச்சங்காய்ப் பட்டியை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள்,

பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தாருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்,

அனைத்து ஆலைகளிலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும், என்பதோடு

ஜல்லிக்கட்டுக்கு பேரவையின் நிலைபாடு என்னவென்று கேட்ட தொலைக்காட்சி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த நிறுவனர், ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களின் விளையாட்டு இதை ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

இதில் பேரவை பொதுச்செயலாளர் ஆ.நாகராசன், தலைமை நிலைய செயலாளர் ச.சு.ஆனந்தன், அமைப்பு செயலாளர் அருந்ததிஅரசு, மாநில இளைஞர் அணி செயலாளர், தமிழரசு, மாநில மகளிர் அணி பொருலாளர் பாண்டியம்மாள், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தலைவர் பச்சையப்பன், சின்னபாண்டியம்மாள், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயாலாளர்கள் கவுதமன், நம்பிராஜ்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார், ஈரோடு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகுமணி,  சிவகங்கை மாவட்ட செயலாளர் பாலு, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துவீரன், மேற்குமாவட்ட தலைவர் நாஞ்சில்.வளவன், உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
______
செய்திச்சுருக்கம்
ஆ.நாகராசன்
பொதுச்செயலாளர்,
ஆதித்தமிழர் பேரவை.
11.1.2017






















No comments:

Post a Comment