அண்மையச்செய்திகள்

Tuesday 27 December 2016

மதுரை செல்லம்பட்டி ஒன்றியம் பாண்டியநகர் கிளையில் ஆதித்தமிழர் பேரவை மாணவர் அணியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு "கல்வியிலும் - வேலை வாய்ப்பிலும் அருந்ததியர் இட ஒதுக்கீடு" விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது

கடந்த 23.12.2016 அன்று செல்லம்பட்டி ஒன்றியம் நடுமுதலைக்குளம் கிளையில்
ஆதித்தமிழர் பேரவையின் மாணவ - மாணவிகளுக்கு இதே தலைப்பில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று 28.12.16 செல்லம்பட்டி ஒன்றியம் பாண்டியநகர் கிளையில் கல்வியிலும் - வேலை வாய்ப்பிலும் அருந்ததியர் இட ஒதுக்கீடு என்ற தலைப்பில் ஆதித்தமிழர் பேரவையின் மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாணவ மாணவிகளிடையே கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியாக நமக்கு தொந்தரவு செய்பவர்களை நாம் எப்படி எதிர்கொள்வது ,மேலும் கல்வி வேலைவாய்ப்புகளில் அருந்ததியர்களை கிடைத்த 3 % உள் இட ஒதுக்கீட்டின் பயன்பாடுகள் அதை நாம் பயன்படுத்தி கொள்ளும் முறைகள் மற்றும் அதை சக அருந்தத்திய மாணவர்களிடேயே கொண்டு சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து நீண்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாணவ மாணவிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.பின்னர் மாணவ மாணவிகளின் பிரச்சனைகள் ,மற்றும் அவர்களின் எதிர்கால விரும்பிய கல்வி கற்கும் வாய்ப்புகளை எப்படி அமைப்பது என்றும் கல்வி நிலையங்களில் ஏற்படும் சிரமங்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகள் ஆதித்தமிழர் பேரவை செய்யும் வழிமுறைகள் என்பது போன்ற பல்வேறு மிகையா திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கு
ஒன்றியச் செயலாளர்
பி.அறிவழகன் தலைமை தாங்கினார்
கிளைச்செயலாளர்
ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்
ஒன்றிய நிதிச் செயலாளர்
தமிழழகன் மானவர்களுக்கு வழி காட்டுதல் உரை நிகழ்த்தினார் .
இக்கருதரங்கத்தில் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்




No comments:

Post a Comment