அரவக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி அவர்களை ஆதரித்து அவரது வெற்றிக்கு உழைத்திட ஆதித்தமிழர் பேரவை செயல்வீரர்ளுக்கான ஆலோசனைக் கூட்டம் அரவக்குறிச்சி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னால் அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் மாவட்ட செயலாளர் நன்னியூர்.ராஜேந்திரன் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகளும், பேரவையின் மேற்கு மாவட்ட செயலாளர் துரை.அமுதன், கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லையரசு, ஈரோடு மாவட்ட செயலாளர் வீரகோபால், திருப்பூர் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணக்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணி, திருச்சி ராசாத்தியம்மாள் மாநில நிர்வாகிகள் குயிலி, தமிழரசு உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், கூட்டத்தில் பேசிய நிறுவனர் அய்யா அதியமான் நாம் ஏன்? தி.மு.க வை ஆதரிக்கின்றோம் என்றும் கலைஞர் அவர்கள் நமக்கு வழங்கிய உரிமைகளையும் சாதனைகளையும் பட்டியலிட்டு பேசுனார். பொதுச்செயலாளர் நாகராசன் உடனிருந்தார்.
No comments:
Post a Comment