நவம்பர்.7 ரஷ்யபுரட்சி நாளை முன்னிறுத்தி சமூகநீதி இயக்கத்தின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது இதில் பேரவையின் நிறுவனர் *அய்யா அதியமான்* அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு, கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இந்நிகழவில் எழுத்தாளர் வே.மதிமாறன், மதுரைவீரன் உண்மை வரலாற்று நூல் ஆசிரியர் குழந்தை ராயப்பன், காந்தி மக்கள் மன்றம் மகேஷ், எழுத்தாளர் சம்சுதீன், பொள்ளாச்சி, கா.சு.நாகராசன், எழுத்தாளர் திருமாவேலன், மாற்றுத்திறனாளி மாரியப்பன், காட்டாறு ஆசிரியர் தாமரை கண்ணன், பூலே.கல்வி மையம் குருசாமி, இளந்தமிழகம் செந்தில்குமார், சக்தி பறை இசைக் குழுவினர் உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றனர்.
உடன்.. பேரவையின் பொதுச்செயலாளர் நாகராசன் து.பொ.செயலாளர் ஆனந்தன், தி.செ.கோபால், நாமக்கல்.சிவகுமார், தொண்டாமுத்தூர்.குரு. உள்ளிட்ட ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆதித்தமிழர் பேரவை
தலைமைக்காக
பொதுச்செயலாளர்.
ஆ நாகராசன்
7.11.16
No comments:
Post a Comment