அண்மையச்செய்திகள்

Sunday 27 November 2016

நாளை 28.11.2016 அன்று தி.மு.க சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் பங்கேற்கவும்.


முன்னறிவிப்பின்றி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்த பிஜேபி அரசைக் கண்டித்தும், தற்போது நிலவும் பணத் தட்டுப்பாடு நீங்கும்வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை (28.11.2016) நடைபெறும் ஆர்ப்பாட்டதிற்கு ஆதித்தமிழர் பேரவை தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும்  ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட கோரிக்கை வெற்றி பெற ஒத்துழைப்பு தருவார்கள் என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
27.11.2016

No comments:

Post a Comment