அண்மையச்செய்திகள்

Sunday 16 October 2016

ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் 16.10.2016 தாராபுரம் பாலாஜி திருமணமண்டபத்தில் நடைபெற்றது,

ஆதித்தமிழர் பேரவை பொதுக்குழு 2016
""""""""""""""""""""""""""""""
ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் 16.10.2016 இன்று தாராபுரம் பாலாஜி திருமணமண்டபத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் தலைமை தாங்கினார், 2016 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பொதுச்செயலாளரும், நிதிநிலை அறிக்கையை நிதிச்செயலாளரும் தாக்கல் செய்து உரையாற்றினர்.
பேரவையின் மாநில மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். கூட்டமுடிவில் பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிறப்புரை ஆற்றினார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..
தீர்மானம்.1
""""""""""""""""
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் வாழும் கொங்கு கவுண்டர் சமூகத்திற்கு தி.மு.க ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட விவசாய நிலங்களுக்கான இலவச மின்சாரம் மற்றும் 20 ஆயிரம் கோடி விவசாயக்கடன் ரத்து போன்றவற்றின் காரணமாக பெரிய அளவில் பொருளாதார பலன் பெற்றதோடு,
பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 70 சதமான இடஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்தி பலனடைபவர்கள் இவர்கள்தான், உதாரணமாக போக்குவரத்து துறையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதவிகள் 260.ல் 110 இடங்கள் கவுண்டர் சமூக வசமே உள்ளது. இதனால் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள ஏனைய சமூகம் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்தொழில் நிறுவனங்கள் இவர்கள் வசமே உள்ளது. இதேபோன்று பெரும்பான்மை உழவு நிலங்கள் இவர்கள் வசமே உள்ளது, அரசு உயர்பதவிகளிலும், அரசியல் அதிகாரத்திலும் பெரும்பான்மையாக இவர்களே உள்ளனர்,
உதாரணமாக தமிழக அமைச்சரவையில் உள்ள 30 அமைச்சர்களில் 8 அமைச்சர்கள் இவர்களே உள்ளனர். இப்படி ஒவ்வொறு துறையாக ஆய்வு செய்தால் எல்லா இடங்களிலும் இவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.
எனவே கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்திற்கு வழங்கப்பட்டு வரும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான இட ஒதுக்கீட்டுக் கோட்டாவை முழுமையாக ரத்து செய்து இதர பிற்பட்டோருக்கு கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும் என இந்த பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம்.2
""""""""""""""""
தமிழகத்தில் நாளும் நாளும் அதிகரித்து வரும் சாதி ஆதிக்க ஆணவப்படுகொலை என்பது,
2013 பெரம்பலூர்.பார்த்திபன் 2013 தருமபுரி.இளவரசன் 2015 சேலம்.கோகுல்ராஜ்
2016 உடுமலைப்பேட்டை.சங்கர்
2016 பழனி.சிவகுருநாதன் என இதுவரை 100 க்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளது, இந்த வன்கொடுமை ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மண்டலம் வாரியாக காவல்துறை மண்டலத்தலைவர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும், அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தீர்மானம்.3
"""""""""""""""""
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும் அருந்ததியர் மக்களுக்கான மூன்று விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு செய்து நடைமுறைப் படுத்திட வேண்டும் என தமிழக அரசை இந்தப் பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவண்..
பேரவை நிறுவனருக்காக
பொதுச்செயலாளர்
ஆ.நாகராசன்.
16.10.2016.





No comments:

Post a Comment