ஆதித்தமிழர்
பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் அய்யா அருந்ததிமைந்தன் அவர்களின்
இரங்கல் கூட்டம் அவர் எரியூட்டப்பட்ட இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு
பேரவையின் நிறுவனர் 'அய்யா: அதியமான் தலைமையில் நடைபெற்றது. இதில்
பேரவையின் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் நிதிச்செயலாளர் ப்.பெருமாவளவன்,
திராவிடர் விடுதலைக் கழகம் புதியவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பழனிச்சாமி,
மக்கள் அதிகாரம் தர்மாராஜ், ம.க.இ.க. ஜீவா, தமிழக வாழ்வுரிமை கட்சி
சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் தமிழாதன், தமிழ்ப்புலிகள் ரமணா, ஆதித்தமிழர்
கட்சி சு.க.சங்கர், உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்பின் பொறுப்பாளர்கள்
கலந்து கொண்டு வீரவணக்க இரங்கல் உரை நிகழ்த்தினர், இந்நிகழ்வில் பேரவை
தோழர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாத நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில்
ஆயிரக்கணக்கில் பொதுமக்களும், ஆதித்தமிழர் பேரவை மற்றும் தோழமை இயக்க
தோழர்களும் கலந்து கொண்டு வீரவணக்க முழக்கமிட்டனர்..
அய்யா அதியமான் அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்
அய்யா அதியமான் அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்
No comments:
Post a Comment