அண்மையச்செய்திகள்

Wednesday 23 December 2015

விலங்குகளை விட கேவலமாக நடத்தப்படும் துப்பரவு பணியாளர்கள் அனைவரையும் மாண்புடனும், உயிருடனும் மீட்டெடுக்க.. தமிழக அரசை வலியுறுத்தி,அய்யா அதியமான் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை ஆர்பாட்டம்

விலங்குகளை விட கேவலமாக நடத்தப்படும் துப்பரவு பணியாளர்கள் அனைவரையும் மாண்புடனும், உயிருடனும் மீட்டெடுக்க.. தமிழக அரசை வலியுறுத்தி,அய்யா அதியமான் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை ஆர்பாட்டம்
______________
சிதைந்துபோன சென்னையை சீர்படுத்த அடிமாடுகளைப் போல் அழைத்துச் செல்லப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த அனைத்து துப்புரவு தொழிலாளர்களையும் திருப்பி அனுப்பு!
மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படும் துப்புரவு தொழிலாளர்கள் மீதான சாதி ஆணவப்போக்கை கைவிடு!
குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசின் இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்து!
பொதுமக்களை போலவே மழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளாகி ஏற்கனவே நொந்து கிடக்கும் சென்னையை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்களை மேலும் கொடுமைபடுத்தும் வகையில் 4.ஆயிரம் நிரந்தர பணியாளர்கள் உட்பட 25.ஆயிரம் துப்புரவு தொழிலாளர்களையும் கட்டாயப்படுத்தி கடுமையாக வேலை வாங்குவதை நிறுத்து!
துப்புரவு தொழில் என்பது, ஒரு சாதி சம்மந்தப்பட்டது என்று மக்கள் மனதில் மண்டிக்கிடக்கும் மனோநிலையை மாற்ற முற்போக்கு இயக்கங்களே! முன் வா!
தூய்மை பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் நபர் ஒன்றுக்கு 2.லட்சம் பேரிடர் நிவாரண நிதி வழங்கு!
துப்புரவு தொழிலாளர்களை கடைச்சரக்கு போலவும், அடிமைகளைப் போலவும் ஒப்பீடு செய்து அவர்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் திருமாவளவனையும்,
வீடு வீடாக வந்து சுத்தம் செய்யாமல் ரோட்டை மட்டும் சுத்தம் செய்து ஏமாற்றிவிட்டு ஓடுகின்றனர், துப்புரவு பணியாளர்கள் என்று அவர்களது தியாகத்தை கொச்சை படுத்தும் வைகோ.வையும் கண்டித்து
இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றுகொண்டு இருக்கிறது
குப்பையை கொட்டுகிறவன் சுத்தமானவன் என்றும் அதை சுத்தம் செய்பவன் குப்பைக்காரன் என்றும் சாதிப்புத்தியுடன் பொதுசமூகம் சொல்வதுபோல்!
அல்லாமல்
குப்பை கொட்டுவது நமது உரிமை என்று ஒவ்வொறுவரும் நினைத்தால் போல்!
அதை
அள்ளுகின்ற கடமையும் ஓவ்வொறுவருடையதே! என்று எண்ணவேண்டும்.
_______________
ஆதித்தமிழர் பேரவை


காணொளியை காண இங்கு சொடுக்கவும்















No comments:

Post a Comment