அண்மையச்செய்திகள்

Sunday 27 December 2015

இப்போதாவது புத்தி வருமா? இவர்களுக்கு! -- ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் கேள்வி எழுப்புகிறார்

இப்போதாவது புத்தி வருமா?
இவர்களுக்கு! -- ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் கேள்வி எழுப்புகிறார்
"""""""""""""""
சட்டப்பேரவையில் அம்மா அம்மா என்று புகழ்பாடி காலத்தை தள்ளும் கட்சிகளுக்கு மத்தியில் ஜெயலலிதாவை நேருக்கு நேராக பார்த்து நாக்கைத் துருத்தி அடிப்பதற்கு கையை ஓங்கிய தில்!

ஊரெல்லாம் சாராயக்கடையை திறந்து வைத்து நாட்டையே குடிகாரர்களாக மாற்றும் ஜெயலலிதா! விஜயகாந்தை
குடிகாரன் என்று கூறிய போது, ஆமாம்! அவர்தான் எனக்கு ஊத்திக்கொடுதார். என்று  கூறிய தில்!

கட்டப்பஞ்சாயத்து செய்து மக்களை சுரண்டும் கட்சிக்காரர்களை கண்டிப்பதற்கு துணிவில்லாமல் இருக்கும் அரசியல்
தலைவர்களுக்கு மத்தியில், தனது கட்சி எம்.எல்.ஏ வை பொதுமக்கள் மத்தியில் அடித்து உதைத்த தில்!

மழைவெள்ள பாதிப்பால் குவிந்து கிடந்த குப்பைகளை கூட்டிப் அள்ள தூய்மைப் பணியாளர்களை அடிமாடுகளைப்போல் அழைத்து சென்ற ஜெயலலிதாவை பார்த்து அ.தி.மு.க காரர்களை துப்புரவுப் பணியில் ஈடுபட சொல்லாதது ஏன் என்று கேள்வி கேட்ட தில்!

பெரியாரிய வாதிகளை நோண்டி நோண்டி கேள்வி கேட்டு இந்துத்துவ வெறியர்களை தூக்கிப்பிடிக்கும் தந்தி டி.வி பாண்டே போன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இருக்கும் இந்த ஊடகவாதிகளையும்,

அம்மையார் வீசி எறியும் அரசு விளம்பரங்களுக்கும்! கேள்வி கேட்க்க துணிவில்லாத ஊடகவாதிகளையும்,

பணம் கொடுத்தால் மட்டும் செய்திவெளியிடும் பணத்தாசை பிடித்த ஊடகவாதிகளின் கேவலத்தை காரித்துப்பிய விஜயகாந்தின் தில்!

பாராட்டத்தக்கது.
இப்போதாவது புத்திவருமா?

==>பேரவை
பொதுச்செயலார்
ஆ .நாகராசன்

No comments:

Post a Comment