அண்மையச்செய்திகள்

Monday 14 December 2015

பலியிடுவது... ஆடுகளை அல்ல! ஆட்களைத்தான்! ____பொதுசெயலாளர் ஆ.நாகராசன், ஆதித்தமிழர் பேரவை.

பலியிடுவது
ஆடுகளை அல்ல!
""""""""""""""""""""
மனித உயிர்களை..
"பலி" கொடுத்தனால்தான்! பதிறாம் நூற்றாண்டில் கட்டிய 'நாயக்கர்மகால்' இன்னும் பலத்தோடு நிற்கிறதாம்!
மனித உயிர்களை..
"பலி" கொடுத்தனால்தான்! 'கிரானைட்' தொழிலில் பணமழை கொட்டியதாம்!
மனித உயிர்களை.. "பலி" கொடுத்தனால்தான்! பல 'கட்டிடங்கள்' இன்னும் பலத்தோடு நிற்கிறதாம்!
மனித உயிர்களை.. "பலி" கொடுத்தனால்தான்!
பல 'நாடுகளை' வெல்லமுடிந்ததாம்!
இது..
பாமரனுக்கும் பஞ்சாங்கவாதிகளுக்கும் பலகாலமாக இருந்துவரும் "நம்பிக்கை"
அதே! நம்பிக்கை ஆளும் அம்மையாருக்கும்! இருக்குமோ, என்னவோ!
சீரழிந்துபோன சிங்காரசென்னையை சீர்படுத்தவும்,
சரிந்துவரும் தனது செல்வாக்கை தூக்கிநிறுத்தவும்,
ஆட்சியை மீண்டும் பிடித்து அதிகாரம் செலுத்தவும்.
"பலி"ஆடுகளாக பலஊர்களில் இருந்து அழைத்துப்போன! துப்புரவு தொழிலாளிகளில் இருந்து, ஒவ்வொறுவராக "பலி"கொடுக்க தொடங்கியுள்ளார் போல!
இதுவரை கொடுக்கப்பட்ட "பலியின்" எண்ணிக்கை இரண்டு!
இலக்கை அடைய இன்னும் எத்தனை? பேரோ!
அம்மையாருக்கே! வெளிச்சம்.
பலியிடுவது...
ஆடுகளை அல்ல!
ஆட்களைத்தான்!
______________
ஆ.நாகராசன்,
ஆதித்தமிழர் பேரவை.



No comments:

Post a Comment