அண்மையச்செய்திகள்

Saturday 12 December 2015

துன்பப்படும் தூய்மைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கஆட்சித்தலைவர் அலுவலக முற்றுகை போராட்டம். - அறிவிப்பு பொதுச்செயலாளர்

போராட்ட அறிவிப்பு
•••••••••••••••••
14.12.2015 அன்று திங்கள்கிழமை
மாவட்ட
ஆட்சித்தலைவர் அலுவலக முற்றுகை போராட்டம்
---------------------
துன்பப்படும்
தூய்மைத் தொழிலாளர்களை மீட்டெடுக்க....

சென்னையில் தேங்கி கிடக்கும் ஒரு லட்சம் "டன்" குப்பைக்கழிவுகளை அள்ளிச்சுமக்க வற்புறுத்தும் அரசின் ஆதிக்கபோக்கை கண்டித்து.

தொண்டு நிறுவனங்களின் துணைகொண்டு அரசு வழங்கும் இயந்திரத்தின் மூலம் சென்னையை சேர்ந்த  மக்களே, அவரவர் பகுதி குப்பைகளை அள்ளிக்கொள்ளடும்.

அரசின் வேறு வேறு துறைகளில் வேலை தருகிறோம் என்று ஆசைவார்த்தை காட்டி அழைத்து சென்ற இளைஞர்களையும், தூய்மைத் தொழிலாளர்களையும் உடனே! திருப்பி அனுப்ப வேண்டும் என..
அரசை வலியுறுத்தி
அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும்.

==>தலைமை குழுவிற்காக, பொதுச்செயலாளர்.

No comments:

Post a Comment