அண்மையச்செய்திகள்

Thursday 17 December 2015

திசம்பர்.18' வள்ளியூர் மகாரசனுக்கு ஆதித்தமிழர் பேரவையின் முதலாண்டு வீரவணக்கம்.

திசம்பர்.18
வள்ளியூர் மகாராசன்
முதலாண்டு வீரவணக்கம்.
*****"*****"*****'*****"*****
சாதிவெறி
கோழைகள்
சாகட்டும்
உன் நினைவில்!
"”""""''"''''''"""""""""""""
நெஞ்சு கனலாய்
எரிகிறதே!
நினைவு புழுவாய்
துடிக்கிறதே!

வள்ளியூர்
ராஜாவே!
மறக்க உன்னை
முடியலயே!
ஆண்டு ஒன்றை
கடந்தாலும்
அனுதினமும்
உன்நினைவே!
நோய் வந்து
இறந்திருந்தால்
நொடிப்பொழுதில்
மறந்திருப்போம்!
வயதாகி
இறந்திருந்தால்
வணக்கிவிட்டு
முடித்திருப்போம்!
லட்சிய நோக்கம்
கொண்டவனாய்
வீரமரணம்
அடைந்திட்டாய்!
வீரமரணம்
அடந்ததனால்
நிரந்தரமாய்
வாழ்கின்றாய்!
பெண்ணின்
மானம் காத்திட!
பெரியார் தடியாய்
எடுத்திட்டாய்
அறிவாற்றல்
கொண்டவனாய்
அம்பேத்கர் வழி
நடந்திட்டாய்!
அருந்ததியர்
விடியலுக்காய்
அதியமான் கரம்
பிடித்திட்டாய்!
வஞ்சகரின்
செயல் முடிக்க
வாலிபத்தை
அற்பணித்தாய்!
வருங்கால
சந்ததி
வாழ்த்தட்டும்
உன் புகழை!
சாதிவெறி
கோழைகள்
சாகட்டும்
உன் நினைவில்!
____________________

பொதுச்செயலாளர்


ஆ.நாகராசன்

No comments:

Post a Comment