அண்மையச்செய்திகள்

Monday 14 December 2015

மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கடலூர் அருந்ததிய மக்களை 16.12.2015 அன்று நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரணம் வழங்குகிறார்.

மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கடலூர் அருந்ததிய மக்களை 16.12.2015 அன்று
நிறுவனர் நேரில் சந்தித்து நிவாரணம் வழங்குகிறார்.
""""""""""""""""
கடலூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டுப் பாளையத்தில் குடியிருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெருமாள்(65), சிவசங்கரன்(42), செல்வி(35), சிவா(15), மாரிமுத்து(13), வீரமுத்து(6), பவானி(5), தினேஷ்(5) ஆகிய 8 அருந்ததியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகியுள்ளனர்.

அந்த பகுதியை 16.12.2015 அன்று நண்பகல் 2.மணிக்கு நிறுவனர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு சில அவசிய உதவிகளை நிவாரணமாக வழங்குகிறார்.

குறிப்பு..
வாகனத்தில் வந்து கலந்து கொள்ள வாய்ப்புள்ள தோழர்கள் வரவும்.

தகவல்..
பொதுச்செயலாளர்.

No comments:

Post a Comment